ஒரு நல்ல நாவலோ அல்லது நாவலில் இருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரமோ மனதை பாதிக்கும்.அதன் விளைவாக,சில நாட்கள் அந்த நாவலின் நினைவுகள் விடாது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஒரு நாவலின் முதல் வரியை மட்டும் படித்து,அது ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.அந்த நாவலைப் படிக்கும் எவரும் அதை உணர்வார்கள் என்றும் உறுதியாக சொல்லமுடியும்.
பொதுவாக நாவலின் முதல் வரி எப்படி இருக்கும் ?
- கிழக்கு வெளுத்தது ; பறவைகள் கூட்டை விட்டு இரை தேட கிளம்பின.
- அது ஒரு மலை மேல் இருக்கும் அழகிய கிராமம்.
- ஆளில்லா சாலையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
- பஸ் சடாரென் திருப்பத்தில் வளைந்தது.
இப்படி பழகிவிட்டு :
அக்கரையிலிருந்து வந்த ஒரு நீராவிப் படகு பினாங்கு துறைமுகத்தை அடைந்தபோது மணி 3.36.
“கடலுக்கு அப்பால்” என்ற நாவலின் முதல் வரி அது.படித்த போது பிரமிப்பின் உச்சத்துக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை.நாவலை எழுதியவர் ப.சிங்காரம்.
ப.சிங்காரம் மொத்தம் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.
- கடலுக்கு அப்பால்.
- புயலிலே ஒரு தோணி.
இரண்டும் நாவல்களும் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புனையப்பட்டது.
ப.சிங்காரம், இளம் வயதில் மலேசியாவில் இருந்த போது பல ராணுவ மூகாம்களுக்கு சென்றிருக்கிறார்;ராணுவ வீரர்களுடன் நல்ல நட்பு இருந்திருக்கிறது.அதன் மூலம் யுத்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.இரண்டு நாவல்களும் தமிழில் மிக முக்கிய நாவல்கள் என இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஒப்புகொள்கிறார்கள்.தமிழில் யுத்த களனை கொண்டு நாவல் இருப்பது மிகுந்த ஆச்சர்யம்.துரதிர்ஷடவசமாக நம் பலருக்கும் இது தெரியவில்லை. நாவலைப் பிரசுரிக்க ப.சிங்காரம் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்.1950’ல் கடலுக்கு அப்பால் எழுதியுளளார்.ஆனால் 1959’ல்தான் அது பிரசுருமாகியது.
ப.சிங்காரத்தின் முழு பேட்டிக்கான இணைப்பு கீழே :
http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_21.html
http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_29.html
அவசியம் படிக்க வேண்டிய நேர் காணல்.
தமிழினி பதிப்பகம் இப்போது இந்த இரண்டு நாவல்களையும் மறு பதிப்பு செய்கின்றன.(பதிப்பகம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) புத்தக கண்காட்சியில் கண்டிப்பாக கிடைக்கும்.விருப்பமுள்ளவர்கள் வாங்கி கொள்ளவும்