போன மார்கழியோடு பெங்களூர் வந்து நாலு வருடம் ஒடிவிட்டது. நடிகைகள் பாணியில் உளறினால் “Actualla நா Bangalore வருவேன்னு கொஞ்சங்கூட எதிர்பாக்கல,It was just an accident.” உண்மை.அப்படித்தான் நடந்தது.வேலை தேடி நொந்து போய் வெறுப்பின் உச்ச கட்டத்தில் இருந்த சமயம், நண்பன் ஒருவனின் திடிர் Ref. உதவியால் ஒரே வாரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தூக்கி எறியப்பட்டேன்.
இப்போது நினைத்தாலும் எல்லாம் கனவு போல் உள்ளது.டிகிரி முடித்த கையோடு சென்னை பயணம். நண்பர்களோடு கூடாரமிட்டது திருவல்லிக்கேணி மேன்ஷனில்.எங்கள் வகுப்பிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்த முதல் பெருமை எங்கள் குழுவையே சாரும்.அதே போல் கடைசியாக வேலை கிடைத்த பெருமையும் எங்களையே சாரும்.வேலை இல்லையென்ற ஒரே கவலையைத் தவிர வேறு கவலை எதுவும் இல்லை.வாழ்க்கை நன்றாகத்தான் கழிந்து கொண்டிருந்தது.
திருவல்லிக்கேணி மேன்ஷன் தினங்கள் மறக்க முடியாதவை.எனக்கு மட்டுமல்ல வேலை தேடி அங்கு வந்த எந்த ஒரு இளைஞனுக்கும் அப்படித்தான்.சென்னையில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத நெருக்கத்தை திருவல்லிக்கேணியில் உணரலாம்.(கட்டடங்களின் நெருக்கத்தை சொல்லவில்லை)
மிர்ச்சி சுச்சியின் “ஹலோ சென்னை”யுடன் எல்லா நாளும் விடியும்.பிறகு ஆடி அசைந்து டீகடைக்குச் சென்று வழக்கமான புலம்பல்களுடன் (என்னலே Freshers’அ ஒரு பய கூப்ட மாட்றான் ?) டீ/காபியை குடித்து கொண்டிருப்போம்.இதற்கிடையில் எதாவது பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் கண்டிப்பாக டீகடைக்கு வருவான் கழுத்தில் கம்பெனி தாலியோடு.அவனை, எங்களைப் போன்ற சிலர் ஏக்கத்தோடும்/வயித்தெரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருப்போம்.”டீகடைல என்ன கம்பெனி Tag வேண்டிக் கிடக்கு,ஆஃபிஸ்க்குள்ளே போய் Tag’அ போட்டா என்ன. எனக்கு மட்டும் வேலை கிடைக்கட்டும், ங்கொயால கக்கூஸ்ல கூட Tag’அ கழட்ட மாட்டேன்” என்று முணுமுணுப்பான் நண்பன்.
பின் மறுபடி மேன்ஷன் வந்து சிறிது நேரம் ஹிந்துவை மேய்ந்தால் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் நேர்காணலுக்கு வரவும் என்று வக்கணை வளிக்கும்.அத்தி பூத்தாற் போல் என்றாவது Freshers’க்கு வேலை வாய்ப்பு விளம்பரம் வரும்.ஆனால் 10,12,டிகிரி என ஒவ்வொன்றிலும் 70% கேட்பார்கள்.எனக்கும்,என் நண்பர்களுக்கும் மொத்தமாக கூட்டி பார்த்தாலே 70% வராது இதில் 10,12 என்று தனி தனியாய் பார்த்தால் கேட்கவே வேண்டாம்.
சரி,சாஃப்ட்வேரில்தானே இந்த மதிப்பெண் பிரச்சனை என்று BPOக்களுக்கு சில காலம் படை எடுத்தோம்.BPOக்களின் சிறப்பம்சமே எத்தனை தடவை தேர்வில் தோற்றாலும் மறுபடி மறுபடி வரலாம்.அதோடு வருடம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கும்.சாந்தோமில், ஒரு பன்னாட்டு BPO இருந்தது.எப்பொழுதெல்லாம் மேன்ஷனில் பொழுது போகவில்லையோ இல்லை கரண்ட் கட் ஆனாலோ உடனே அங்கு தேர்விற்கு கிளம்பிவிடுவோம்.அடிக்கடி அங்கு தேர்விற்கு சென்றதன் விளைவு கேள்வித்தாள் குடுக்கும் முன்னரே, பதில்களை தாளில் டிக் செய்யும் திறமை பெற்றிருந்தோம்.போதாதற்கு தேர்விற்கு வந்த அனைவருக்கும் காபியும் பிஸ்கட்டும் தந்தார்கள்.ஒரு எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டு நேர்காணல் ரவுண்ட்.ஒவ்வொரு தடவையும் இரண்டாவது ரவுண்டில் வெளியனுப்பிவிடுவார்கள்.ஒரே ஒரு தடவை அதிசயமாக கடைசி ரவுண்டில் நுழைந்தேன்.ஆனால் ஒரே கேள்வியில் அந்த கனவும் பொய்த்துப்போனது.எதற்காக MCA படித்துவிட்டு BPO பக்கம் வருகிறாய் என்று தேர்வாளர் கேட்க ஒரு வித பதட்டத்தில் BPOக்களில் சேர்ந்தால் Englishஐ நன்றாக improve செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.Englishஐ Improve செய்தபின்தான் இங்கு வரவேண்டும்,இங்கு வந்து Improve செய்ய இது என்ன Vivekananda Institutea? என்று கேட்டதன் விளைவு BPO சகாப்தம் முடிந்துபோனது.
To Be Contd….