அஞ்சான் பாடல்கள் விடாது தொலைக்காட்சி வழியாக துரத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் நின்று நிதானித்து ரசித்ததில்லை.ஆனால், நேற்று காலை தொலைக்காட்சியில் யதேச்சையாக ஒலித்துகொண்டிருந்தபோதுதான் – இத்தனைக்கு அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த பரபரப்பில்- சட்டென பிடித்துப்போனது.கடந்த சில நாட்களாக ஷமிதாப் பாடல்களை கேட்டுகொண்டிருந்தவன் இன்று ஏனோ அதை கேட்கப் பிடிக்காமல் இந்த பாடலையே repeat audience’ஆக கேட்டுக்கொண்டிருக்கிறேன். யுவனின் தமிழ் உச்சரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லாவிட்டாலும் அவர் காதல் பாடல்களில் ஒரு தனி வசீகரம்,மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பாடலுக்கு Qawwali style கூடுதல் அழகை தருகிறது.இஸ்லாத்துக்கு மாறியதற்கு Tribute’ஆக Yuvan இதை Compose செய்தாரா அல்லது தற்செயலாக இது நிகழ்ந்ததா ?