RSS

Monthly Archives: February 2013

Aside

தமிழ் சினிமா இசைக்கும் தற்போது கடுமையான Recession போல.கேட்கிற பல பாடல்கள் கடைந்தெடுத்த மகா குப்பை.கடந்த சில‌ வருடங்களில், மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தாலே, ஒரு நாலைந்து தான் தேறும் போல‌.மீதி இருக்கும் ஏனைய குப்பைகள், மியுசிக் சானல்கள்,பண்பலை வாயிலாக – குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மருந்து புகட்டுவது போல், திரும்ப திரும்ப நம் காதுகளில் செலுத்தப்பட்டு  விடாப்படியாக Hit ஆக்கப்படுகிறது.

இதைவிட கவலை தரும் விஷயம் பாடல் வரிகளில் உள்ள தரம்- Lack of Lyrical Clarity/Quality.பாடல்களின் தரம் தாழ்ந்து போனதற்கு முக்கிய காரணம்- தடி எடுத்தவன் எல்லா தண்டல்காரன் என்பது போல், நடிகர்கள்,இயக்குனர்கள் என்று பலரும் சகட்டுமேனிக்கு பாட்டு எழுதுவது.இதனால், பாடல் வரிகள் ட்யுனோடு சேர்ந்து பயணிக்காமல் தனியாய்த் துருத்திக்கொண்டு தெரிகிறது.இன்னும் குறிப்பாகச் சொன்னால், வார்த்தைகள் ட்யுனிற்கு அடங்க மறுக்கின்றன.ஹிந்தி பாடல்களை தமிழில் டப் செய்து கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.இதற்கு நல்ல உதாரணம் :

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல.

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..

மேற்கண்ட இடங்களில் பாடல் வரிகள் ட்யுனோடு அடங்க சிரமப்பட்டு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

விளைவு : பாடல் வசன-நடையாக விடுகிறது

இன்னொரு பிரச்ச‌னை அர்த்தமில்லா Dummy வரிகள்.இயக்குனர்களும் இதை பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பாடல் வரிகள் வெறும் ட்யுனை நெறப்பும்  Fillerக‌ள் என நினைத்துக் கொண்டார்களா ? மனம் போன போக்கில் வார்த்தைகளை போட்டு நெறப்புகிறார்கள்.ஆரம்ப வரிகள் Catchyயாக இருக்க வேண்டும்,பாடலினுள் எந்த புண்ணாக்கும் இருந்துவிட்டு போகட்டும்.

எவன்டி உன்னப் பெத்தான் பாட்டின் சரணத்தில் வரும் வரிகள் போதும், இன்றைய‌ தமிழ் சினிமா இசையின் மகத்துவத்தை புரிந்து கொள்ள…

Un Paste Brush’um Naanthan
Un Šhøwer Gel’um Naanthan
Un Maanam Kaakura Maelaada Naanthan
Un Lip Gløss’um Naanthan
Un Èye Liner Naanthan
Un Azhaga Køøtura Makeup’ae Naanthan
Un Teddybear Naanthan
Un Bed & Pilløw Naanthan
Un Veetøda Night Watchman Naanthan
Un Nagamum Šathaiyum Naanthan

அது என்ன, உன் Un Paste Brush’um நாந்தான் / Un Šhøwer Gel’um நாந்தான்? இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

யார் கேட்டார்கள் இவர்கள் பாட்டு எழுதித் தொலைக்க  வேண்டுமென்று ?

*******

நம் இயக்குனர்களுக்கு, பாடல்களின் முக்கியத்துவம்/தேவை பற்றி ஒரு தெளிவில்லையா ? அல்லது மெனக்கெட விருப்பமில்லையா ? இவர்கள் அனைவரும் பாலசந்தர் படங்களைத் திரும்ப ஒரு முறை பார்க்க வேண்டும்.தமிழ் சினிமாவில், பாலசந்தரைப் போல வேறு எவரும் பாடல்களை உருப்படியாக கையாண்டதில்லை. சிந்து பைரவியில் – பாடறியேன் என்ற பாட்டைத் நீக்கி விட்டால் போதும், அந்த படமே அர்த்தமிழந்துவிடும். ஆனால் இன்று படத்தின் சில காட்சிகளை நீக்கினாலே எந்த பாதிப்பும் இல்லை என்ற ரீதியில் படங்கள் வருகிறது.

காட்சிகளில்/வசனங்களில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை பாடல்களால்/பின்னணி இசையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

இதற்கு  நல்ல உதாரணங்கள் சொல்ல வேண்டுமென்றால் :

  • பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே…
  • நானொரு சிந்து காவடிச் சிந்து…
  • கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
  • சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ்…
  • நீ ஆண்டவனா தாய் தந்தைதான்…
  • பூங்காத்து திரும்புமா எம்பாட்ட விரும்புமா…

இந்த பாடல்களில் சொல்லியதை வசனத்தால்,காட்சியமைப்புகளால் சொல்ல முடியுமா ?

பாடல்கள் கதையை நகர்த்த,அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல‌ இயக்குனருக்கு பெரிதும் உதவுகின்றன.இதை ஏன் இன்றைய இயக்குனர்கள் புரிந்து கொள்ளவில்லை ? பாடல்களை வெறும் Crowd-Pulling பண்டமாக பார்க்கின்றனர் ?

*******

கடந்த பத்து ஆண்டுகளில் எனக்குப் பிடித்த ஒரே பாடல் என்றால் அது:

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

என்ன வரிகள்!!! வைரமுத்து நீர் 100 ஆண்டு வாழவேண்டும் அய்யா..

தேவை அவசர சிகிச்சை – தமிழ் சினிமா இசை.

 
Leave a comment

Posted by on February 5, 2013 in Cinema, K Balachandar, Music.