RSS

Category Archives: Bangalore.

பெங்களூரில் இன்று மழைக்காலம்.

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது – பருவ மழைதான் – இன்று பெய்தது.வருடா வருடம் ஜுனிலேயே தவறாமல் வருவது இந்த வருடம் ஜூலைவரை பெங்களூர் மக்களை காக்க வைத்து படாத பாடு படுத்திற்று.மழைக்கு வந்த வாழ்வு!!! இன்று இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை தூறிக் கொண்டேதான் இருக்கிறது.சன்னலை திறந்து வைத்து இதை தட்டச்சு செய்யும் போது அறை எங்கும் அலாதியான குளுமை!! அது என்ன மாயம் என்று புரியவில்லை,ம‌ழை நேரங்களில் பெண்கள் அநியாயத்திற்கு அழகாய்த் தெரிகிறார்கள்!

மனம் மிகுந்த பரவசத்திலிருந்தது.இந்த உற்சாகத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கும்விதமாக‌ கார்த்திக்கை கைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் அவர் கழுத்தை அறுத்தேன்.அதற்கு மேல் நீட்டித்தால் என் நம்பரை delete செய்து விடுவாரோ என எண்ணி முடித்துக்கொண்டேன்.

ஒரு நல்ல ஃபிலடர் காபியை பருகிக்கொண்டு மழையை ரசிக்கும் மனநிலையில் இருந்தேன்.ஆனால் இந்த பாழாய்ப் போன அலுவலக மெஷினில் Cappucino எழவைத் தவிர வேறில்லை என்பதால் அதை குடித்துக்கொண்டே மழையை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்தால் ஒரு நல்ல நாவலை கையில் எடுத்து சன்னல் பக்கம் அமர்ந்திருக்கலாம்.மழையை பார்த்து கொண்டு படிப்பது சுகானுபவம்!!! ம‌ழை என்றதும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ….

Charanam : 1

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய Shower இது
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

Charanam :2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்!!

 

Tags:

Triplicane to Elec.City.

போன மார்க‌ழியோடு பெங்களூர் வந்து நாலு வருடம் ஒடிவிட்டது. நடிகைகள் பாணியில் உளறினால் “Actualla நா Bangalore வருவேன்னு கொஞ்சங்கூட‌ எதிர்பாக்கல,It was just an accident.” உண்மை.அப்படித்தான் நடந்தது.வேலை தேடி நொந்து போய் வெறுப்பின் உச்ச கட்டத்தில் இருந்த சமயம், நண்பன் ஒருவனின் திடிர் Ref. உதவியால் ஒரே வாரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தூக்கி எறியப்பட்டேன்.

இப்போது நினைத்தாலும் எல்லாம் கனவு போல் உள்ளது.டிகிரி முடித்த கையோடு சென்னை பயணம். நண்பர்களோடு கூடாரமிட்டது திருவல்லிக்கேணி மேன்ஷனில்.எங்கள் வகுப்பிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்த முதல் பெருமை எங்கள் குழுவையே சாரும்.அதே போல் கடைசியாக வேலை கிடைத்த பெருமையும் எங்களையே சாரும்.வேலை இல்லையென்ற ஒரே கவலையைத் தவிர வேறு கவலை எதுவும் இல்லை.வாழ்க்கை நன்றாகத்தான் கழிந்து கொண்டிருந்தது.

திருவல்லிக்கேணி மேன்ஷன் தினங்கள் மறக்க முடியாதவை.எனக்கு மட்டுமல்ல வேலை தேடி அங்கு வந்த எந்த ஒரு இளைஞனுக்கும் அப்படித்தான்.சென்னையில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத நெருக்கத்தை திருவல்லிக்கேணியில் உணரலாம்.(கட்டடங்களின் நெருக்கத்தை சொல்லவில்லை)

மிர்ச்சி சுச்சியின் “ஹலோ சென்னை”யுடன் எல்லா நாளும் விடியும்.பிறகு ஆடி அசைந்து டீகடைக்குச் சென்று வ‌ழக்கமான புலம்பல்களுடன் (என்னலே Freshers’அ ஒரு பய கூப்ட மாட்றான் ?) டீ/காபியை குடித்து கொண்டிருப்போம்.இதற்கிடையில் எதாவது பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் கண்டிப்பாக டீகடைக்கு வருவான் கழுத்தில் கம்பெனி தாலியோடு.அவனை, எங்களைப் போன்ற சிலர் ஏக்கத்தோடும்/வயித்தெரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருப்போம்.”டீகடைல என்ன கம்பெனி Tag வேண்டிக் கிடக்கு,ஆஃபிஸ்க்குள்ளே போய் Tag’அ போட்டா என்ன. எனக்கு மட்டும் வேலை கிடைக்கட்டும், ங்கொயால கக்கூஸ்ல கூட Tag’அ கழட்ட மாட்டேன்” என்று முணுமுணுப்பான் நண்பன்.

பின் மறுபடி மேன்ஷன் வந்து சிறிது நேரம் ஹிந்துவை மேய்ந்தால் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் நேர்காணலுக்கு வரவும் என்று வக்கணை வளிக்கும்.அத்தி பூத்தாற் போல் என்றாவது Freshers’க்கு வேலை வாய்ப்பு விளம்பரம் வரும்.ஆனால் 10,12,டிகிரி என‌ ஒவ்வொன்றிலும் 70% கேட்பார்கள்.எனக்கும்,என் நண்பர்களுக்கும் மொத்தமாக கூட்டி பார்த்தாலே 70% வராது இதில் 10,12 என்று தனி தனியாய் பார்த்தால் கேட்கவே வேண்டாம்.

சரி,சாஃப்ட்வேரில்தானே இந்த மதிப்பெண் பிரச்சனை என்று BPOக்களுக்கு சில காலம் படை எடுத்தோம்.BPOக்களின் சிறப்பம்சமே எத்தனை தடவை தேர்வில் தோற்றாலும் மறுபடி மறுபடி வரலாம்.அதோடு வருடம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கும்.சாந்தோமில், ஒரு பன்னாட்டு BPO இருந்தது.எப்பொழுதெல்லாம் மேன்ஷனில் பொழுது போகவில்லையோ இல்லை கரண்ட் கட் ஆனாலோ உடனே அங்கு தேர்விற்கு கிளம்பிவிடுவோம்.அடிக்கடி அங்கு தேர்விற்கு சென்றதன் விளைவு கேள்வித்தாள் குடுக்கும் முன்னரே, பதில்களை தாளில் டிக் செய்யும் திறமை பெற்றிருந்தோம்.போதாதற்கு தேர்விற்கு வந்த அனைவருக்கும் காபியும் பிஸ்கட்டும் தந்தார்கள்.ஒரு எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டு நேர்காணல் ரவுண்ட்.ஒவ்வொரு தடவையும் இர‌ண்டாவது ரவுண்டில் வெளியனுப்பிவிடுவார்கள்.ஒரே ஒரு தடவை அதிசயமாக கடைசி ரவுண்டில் நுழைந்தேன்.ஆனால் ஒரே கேள்வியில் அந்த கனவும் பொய்த்துப்போனது.எதற்காக MCA படித்துவிட்டு BPO பக்கம் வருகிறாய் என்று தேர்வாளர் கேட்க ஒரு வித பதட்டத்தில் BPOக்களில் சேர்ந்தால் Englishஐ நன்றாக improve செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.Englishஐ Improve செய்தபின்தான் இங்கு வரவேண்டும்,இங்கு வந்து Improve செய்ய இது என்ன Vivekananda Institutea? என்று கேட்டதன் விளைவு BPO சகாப்தம் முடிந்துபோனது.

To Be Contd….

 
7 Comments

Posted by on February 25, 2011 in Bangalore., Elec.City, Madras, Personal, Triplicane

 

சில நல்ல ஆங்கில புத்தகக் கடைகள்.

MG-Road – Brigade Roadகளில் என்னை மிகவும் கவர்வது அழகான சேட்டுப் பெண்களைவிட அங்கு உள்ள புத்தக கடைகளே.புத்தகங்களை வாங்குகிறேனோ இல்லையோ புத்தக கடைகளில் வரிசையாக,துறை வாரியாக புத்தகங்கள் அடுக்கப் பட்டிரும் அழகை ரசிப்பதற்காகவே ஒவ்வொரு வார சனி ஞாயிறுகளில் அங்கு “கற்றது தமிழ்” பிரபாகர் போல தனியாக‌ அலைவது வழக்கம்.

Bangalore Central அருகே இருக்கும் Crossword Book Shop‘ல் ஒரு அரை மணி நேர சுற்றல்.ஒவ்வொரு ஷெல்ஃபிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகளை மேய்ந்து,சில புத்தகங்களின் பக்கங்களை புரட்டி,பின் மாடிக்குச் சென்று ஏதாவது நல்ல ஹிந்தி படங்களின் டிவிடிகள் குறைந்த விலைக்கு இருக்கிறதா என்று பார்ப்பது,பின் மதிய உணவிற்காக பிருந்தாவன் ஹோட்டலுக்குள் புகுவது என் சம்பிராதய காலை நேர‌ அட்டவணை.

Post-Lunch ஹிகின்பாத்தம்ஸ்.எப்போது சென்றாலும் வழக்கமான எரிச்சலூட்டும் தலைப்புகள்.சாண்டில்யனின் “கடல் புறா “,கல்கியின் “பார்த்திபன் கனவு”,சோழர் வரலாறு,ஓஷோ புத்தகங்கள்,வாழ்வில் முன்னேறுவது எப்படி,30 நாளில் கன்னடம்,பருத்தி வீரன் திரைக்கதை,IPS ஆவது எப்படி,மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ,செட்டிநாட்டு சமையல்.இதையும் மீறி நீங்கள் ஏதேனும் இலக்கிய புத்தகத்தை கேட்டால்,தமிழ்ப் பிரிவில் வேலை செய்யும் நபர்,அவரின் வழக்கமான பதிலை வைத்திருப்பார்.பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கேன் சார்,Month-Endla வந்துரும்.அதுலே நீங்க சொன்னது இருக்கு.ஆனால், அது எந்த Month-End என்பது மடிவாலா அய்யப்பனுகே வெளிச்சம்.இருந்தும்,காவெரி நடுவர் மன்ற‌ தீர்ப்புக்கு காத்திருக்கும் தமிழனைப் போல ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையோடு சென்று ஏமாறுவது, இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.இனியும் நடக்கும்.

இப்படி போய் கொண்டிருந்த என் வார இறுதிகளில் ஒரு திடீர் மாற்றம்.இரண்டு அருமையான புத்தக கடைகளை போன வாரம் பார்க்க நேர்ந்தது.இரு நல்ல புத்தக கடைகளை கண்டு கொள்ள எனக்கு பெங்களூரில் நாலு வருடம் ஆனது.வெட்கக்கேடு!!

Blossom Book House இருக்கும் இடமே சுவாரஸ்யம்.Church சாலையின் இரு பக்கம் முழுதும் பரவியிருக்கும் பப்புகள்,இளம் ஜோடிகளின் குறும்புச் சிரிப்புகள்,கன்னத் தடவல்கள்,கால் சீண்டல்கள்,உரசும் பீர் கோப்பைகள்,லவுட்ஸ்பீக்க‌ர்களின் கதறல்கள் என்று அமெரிக்கனிஸத்தை பிரதிபலிக்கும் ஒரு இடத்தில் அமைதியாக ஒரு புத்தக கடை மூன்று தளங்களில் வீற்றிருப்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது.

Blossom‘ல், தரை தளம்,முதல் தளம்,இரண்டாம் தளம்,மூன்றாம் தளம் என ஒவ்வொரு தளத்திலும் Steel Rackகுகள் முழுக்க புத்தகங்கள்.புதிய புத்தகங்களோடு பழைய புத்தகங்களும் கிடைக்கிறது.குறுகலான படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாக புத்தகங்களை ரசிப்பது, இரு பக்கமும் Steel Rackகுகளில் புத்தகங்களுடன் ஊடே நாம் தனியாக நடந்து வருவது அலாதி இன்பம்.புதிய புத்தகங்களுக்கு 20% தள்ளுபடியும் பழைய புத்தகங்களுக்கு 50%-60% வரை தள்ளுபடி தருகிறார்கள்.

உதாரணமாக‌, Crossword”ல் ஸாலிங்கரின் “The Catcher in the Rye” நாவல் விலை 299,Blossom‘ல் 240.இதே நாவலை பழைய புத்தகமாக வாங்கினால் விலை 90தான். Classics,History,Music,Movies,Educational,Auto-Biography,Self-Improvement,Non-Fiction என்று சகல Genre’களிலும் புத்தகங்கள் இருக்கின்றன‌.இது தவிர National Geographic’ன் பழைய இதழ்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.விலை 30Rs.நீங்கள் புத்தகத்தின் தலைப்பை மறந்தாலும் அங்குள்ள கணிப்பொறியில் Google Search செய்து தலைப்பை எடுத்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.

Web Portal : http://www.blossombookhouse.com/

Address : #84/6, Opp to Amoeba, Church street(Off Brigade Road), Bangalore-560001

அடுத்தது Select Book Store.Brigade Road’ன் ஊடே குறுகலான ஒரு சாலையில், பூனை பதுங்கியது போல கண்ணுக்கு எளிதாக அகப்படாமல் இருக்கிறது.65 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த புத்தகக் கடை,இந்தியாவின் பழமையான புத்தகக் கடைகளில் ஒன்று.

கடையின் நிறுவனர் K.B.K Rao தேர்ந்த வாசிப்பாளர்.புத்தகங்களை வெறும் வியாபார நோக்கோடு அணுகாமல் உண்மையாக நேசிப்பவர்.அதனால் தான 65 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் இந்த புத்தகக் கடையை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கிறது.கடையின் வெளித் தோற்றம் ஒரு சிறிய அறையயைப் போல இருந்தாலும் எங்குமே கிடைக்காத பல அரிய‌ புத்தகங்களுக்குகாக பலர் விரும்பி வருகின்றனர்.முழுக்க முழுக்க பழைய புத்தகங்கள் தான்.

விலையும் அதனால் மிகக் குறைவு.புத்தகத்தின் விலை எண்பது ரூபாய் என்று போட்டிருந்து,நீங்கள் எண்பது ரூபாயா!! என்று வாய் பிளந்து கேட்டால் உடனே கீழே இருக்கும் படத்திலிருப்பவர் எழுபது ரூபாய் என்பார்.மறுபடி எழுபது ரூபாயா!! என்று திருப்பிக் கேட்டால் அறுபது ரூபாய் என்பார்.இப்படியே புத்தகத்தின் விலையை எவ்வளவு குறைக்க வைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வைப்பது உங்கள் சாமர்த்தியம்!!

கடந்த வாரம், நான் முதன் முதலில் இக்கடைக்குச் சென்ற போது George Orwell‘ன் “Animal Farm” கண்ணில் பட்டது.அது 1972‘ல் யாரோ பம்பாய் நூலகத்தில் வாங்கியது.எங்கெங்கோ பலரிடம் கைமாறி இப்போதைக்கு என்னிடம் வந்திருக்கிறது.அதை பார்த்த போது ஒரு Nostalgic உணர்வு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.அந்தக் கால பம்பாயை கற்பனை செய்ய தொடங்கிவிட்டது என் மனது.(இத்தனைக்கும் நான் பம்பாயை படங்களில் பார்த்த‌தோடு சரி) ஒரு வலியும் சந்தோஷமும் கலந்த உணர்வு சிறிது நேரம் இருந்தது.இத்தகைய உணர்வு Crossword போன்ற கடைகளில் கிடைக்குமா என்பது சந்தேகமே!!

Select Book Shop

No. 71, Brigade Road, Cross, Brigade Road
Bengaluru, Bengaluru, Karnataka 560001

Website : http://www.selectbooksindia.com/

 

There’s No More Sip between the cup & the lip.

untitled

Though Bangalore is famous for 2B’s (Babes and Booze),there’s a set of crowd  who opt for Indian Coffee House in the weekends.Thanks to its Old-Fashioned Ceilings,Museum Styled Fans,Turban Clad Servers Serving Coffee in China Clay Cup & Saucers.Thus creating a Vintage Ambience which takes us to  Late 70’s – 80’s[i.e.No-Nonsense IT Era].This homely atmosphere creates the difference and makes ICH stand ahead of Baristas and Coffee Days.But all these special moments are jus for another 12 days,Yes!!! Indian Coffee House gonna close down its shutters by the end of this month.Though  i dunno the reason for the closure,i was bit depressed and shocked ever since i read the news in outlook,Coz i have no other choice in MG Road.Jus being there 15 – 30 mts with glancing a book by sipping a steamy cup of coffee makes more special than in any other outlets in Bangalore.Infact many a times i had bought a book from Higginbothams jus to leaf over there with a cup of coffee.Adding to this gals too join with us for a coffee in the Opp.Seat(but sadly with their boyfriends.)Dunno where i have to look for all these things from next month?

 
8 Comments

Posted by on February 17, 2009 in Bangalore.

 

Tags:

Barking Dogs Bite.

I guess in the coming years dogs will form 2/3 majority in the total population of bangalore city. Yes!!! Doggies breeding here @ Bret Lee Pace.(Thanks to its honeymoon climate.)

The famous Vivek Dialog in Poovellam Un Vaasam comes to my mind

” Naan Varum Pothu Enga Therula Moonae Moonu Naay Irunthuchu Ippa Enna Pannuchu Yaethu Pannuchunu Therila Kootam Kootama Alaiyuthu ”

Rough Translation of the above :

“When I Came here i saw jus two dogs,dunno what they did thereafter,now a bunch of doggies roaming here and there “

Jokes Apart:

Its really a nightmare for those who returning to their homes after 9 or in late hours,when four to six dogs lining up b4 them.Atleast we dont need to bother if they dint do any harm but its not the case.Imagine 3 to 4 stray dogs Continously woofing  behind you in high decibel @ midnite God!!! Really dreadful!!! Luckily any day u may see only one or two but the moment any person comes all those will form an Identification Parade before you.Adding to this woe, NGO’s who are in charge of Sterlizing the stray dogs were pulled back due to the due in payment by the Corporation.Once a fatal incident occurs, corporation will rush up and do the sterlization for some months which is mere an eye-wash(which happened in last year after a boy was killed by a stray dog.)

Barking dogs won’t bite fails in Bangalore.

 
1 Comment

Posted by on October 29, 2008 in Bangalore.

 

Tags: