RSS

Monthly Archives: January 2011

எல்லா ஒரு விளம்பரம்…..

ரொம்ப நாளாக இருந்த அல்ப்ப‌ ஆசை இன்று நிறைவேறியது.அது Theme‘ஐமாற்ற வேண்டும் என்பது.அவ்வப்போது மாற்றிப் பார்த்தாலும் அதில் திருப்தியடையாமல் பழையபடி உள்ள Default Themeக்கு Blog சென்றுவிடும்.ஒரு வழியாக‌, இன்று இந்த Beach Theme‘ல் மனம் திருப்தியடைந்து…எல்லாம் சுபமாக முடிந்தது.

தளபதி, காவலனில் சொல்வது போல “Lifela ஒரு Change வேணும்ல”.

 
1 Comment

Posted by on January 24, 2011 in Blog, Personal

 

தொழில்நுட்ப வளர்ச்சியும் சில அதிகப்பிரசங்கிகளும்

பொதுவாக எந்தப் படம் பார்க்கும் முன் அதை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளப் பிடிக்காது.அது படத்தின் சுவாரசியத்தை குலைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம்.விமர்சனம் படிக்க மாட்டேன்.அந்தப் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைகூட‌ TVயில் பார்க்க மாட்டேன்.படம் பார்த்தபின்தான் எல்லாம்.

ஆனால் இன்றைய தேதியில் இந்த உப‌வாசங்களை க‌டைபிடிப்பதுக்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.சுப்ரமணியபுரம் பெங்களூரில் Release ஆகாத சமயம்.யதேச்சையாக சென்னை சென்றேன்.சுப்ரமணியபுரம் பார்க்காமல் பெங்களூர் திரும்பக்கூடாது என்று சாந்தி தியேட்டருக்கு நானும் என் நண்பனும் சென்றோம்.அந்த நேரம் பார்த்து இன்னொரு நண்பன் திருநெல்வேலியிலிருந்து செல்ஃபோனில் அழைக்க…

நான், “மாப்ள!! சுப்ரமணியபுரம் படத்துக்கு வந்துருகேம்ல,படம் முடிந்சு கூப்புடுறேன்

நண்பன், “சரிலே, நாளைக்கு Call பண்றேன்” என்று இணைப்பைத் துண்டிக்க முயல‌,அப்போதாவது நான் சும்மா இருந்து தொலைத்திருக்கலாம்.ஆனால் விதி வலியது.

நான், “நீ படம் பாத்தியா ? பட்டைய கிளப்புச்சா” என்று வலிய போய் வாங்கி கட்டிக் கொண்டேன்.

நண்பன், “என்ன படம்ல,கடசில எல்ல பயலும் செத்துருவானா,அந்த எழவ பாக்கணுமா” சரி வச்சுறேன்.

அந்த பதிலை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.என்ன செய்ய ஏது செய்ய என்று ஒன்றும் பிடிபடவில்லை.திரும்பவும் பூமி 2 நிமிஷம் முன்னால் போய் விடாதா என்று தோன்றியது.அப்படி ஒரு எமாற்றம் மனதில்.ஒரு மாதமாக அந்தப் படத்தை பார்க்கும் வெறியில் இருந்த எனக்கு,ஒரே நொடியில் அந்த பதிலால் சுக்கு நூறாய் ஆயிற்று. நொந்து போய் தியேட்டருக்குள் வேண்டா வெறுப்பாய் நுழைந்தேன்.படத்தின் உயிரே கிளைமேக்ஸ்தான்.அதையே போட்டு உடைத்ததால் ப‌டத்தை சுத்தமாக ரசிக்க முடியவில்லை.2 மணி நேரம் பேருக்கு உட்கார்ந்து விட்டு வந்தேன்.இன்று வரை அந்த எரிச்சலும்,வலியும் இருக்கிறது.

இதுபோக‌ ப‌டம் வந்த இரண்டு மணி நேரத்தில் Twitter,Orkut,Blogger என்று எல்லா Social Network Siteகளிலும் படத்தை Post-Mortem செய்ய‌ ஆரம்பித்து விடுகிறார்கள்.தொழில்நுட்ப வளார்ச்சியின் மிகப்பெரிய பாதிப்பு இது.Privacy என்பதே இல்லாமல் போய்விட்டது. ஈரம் படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும் இப்படித்தான்.இத்தனைக்கும் ப‌டம் வெளிவந்த மறுநாள்.எனக்கு முன் இருக்கும் ஒரு ஆசாமி அவன் நண்பனுக்கு செல்ஃபோனிலேயே ப‌டத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.எனக்கு உச்ச கட்ட பயம்.அதை கேட்க கூடாதென எனக்குள்ளாகவே கெளசல்யா சுப்ரபாதத்தை முனக ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளை! இடைவேளை விடுவதுக்குள் அவன் வரிசை வந்துவிட்டது.இல்லையெனில் முழு படத்தை செல்ஃபோனிலேயே ஓட்டியிருப்பான்.

இந்த மாறி மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.தாங்கள் செய்யும் செயல்கள் படம் பார்க்க‌ வருபவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

இணையத்திலும் இது போன்று சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள்.எந்தப் படமாக இருந்தாலும் சகட்டுமேனிக்குத் தாளிக்கிறார்கள்.அதிலும் விஜய் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து overhauling செய்துவிடுகிறார்கள்.விஜயை விமர்சிப்பதில் தனி இன்பம்,ஒரு குருர மகிழ்ச்சி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.சனியன் அதோடு தொலைந்தாலும் பரவாயில்லை.பேரிலக்கியம் படைத்தது போல ஒருத்தர் விடாமல் Email Fwd வேறு செய்து விடுகிறார்கள்.இவர்களின் வலைதளத்தின் Hit Ratioவை அதிகரிக்க இது ஒரு எளிய வழி.

கேட்டால் “விஜய் நல்ல படம் நடிச்சா நாங்க ஏன் விமர்சிக்க போறோம்” என்று Oscar Jury ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். நான் இவர்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்

“விஜய் நல்ல படம் நடிக்க மாட்டார்ன்னு நல்லாத் தெரியுது அப்புறம் ஏன் இன்னும் அவர் படங்களை இவர்கள் பார்க்கிறார்கள் ? “ அப்படி சிரமப்பட்டு காசை கிணற்றில் போல வேண்டுமா ? செய்ய மாட்டார்கள்.காரணம் இவர்கள் பொழப்பு ஓடாது.இவர்கள் ஒரு வகை.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள்.விமர்சனத்தை பத்தி பத்தியாக எழுதி தள்ளுகிறார்கள்.படத்தின் ரீல் 12 என்றால் இவர்கள் செய்யும் விமர்சனத்தின் ரீல் அதை விட நீள‌…மாக இருக்கிறது.வயிற்றில் புளியை கரைக்கிறது.கிட்ட திட்ட தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறார்கள். நாள் முழுதும் தலை கீழாய் நின்று யோசித்தாலும் ஐந்தாறு பத்திகளை என்னால் தாண்டமுடியவில்லை.இந்த‌ இடத்தில் முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
விமர்சனத்தில் பட‌த்தின் முக்கியமான‌ திருப்பம் மிகுந்த காட்சிகளை அல்லது கிளைமேக்சை தயவுகூர்ந்து சொல்லாதீர்கள்.இல்லை சொல்லித்தான் தீருவேன் நீ யார் கேட்க என்றால் Spoiler Alertஆவது போடுங்கள்.படம் பார்க்காதவர்கள் அதை படிக்காமல் ஆவது இருப்பார்கள்.விமர்சனத்தில் படத்தின் முக்கியமான Plus&Minusஐ சொல்லுங்கள் படத்தின் ரீலை ஓட்டாதீர்கள்.அது தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்கள் வேலை.

கடைசியாக‌:

படம் பார்க்க வரும் புண்ணியாத்மாகளுக்கு சில வேண்டுகோள்கள்:

  • ஃபிகரை தியேட்டருக்கு கூட்டி வந்து, படம் ஓடும்போது குசு குசு என்று பேசாமல் இருக்க‌..
  • செல்ஃபோனில் காட்டுக் கூச்சல் போடாமலிருக்க‌..
  • அவ்வப்போது திரையை மறைத்து, கும்ப‌ல் கும்பலாக தம் அடிக்க செல்லாதிருக்க‌..

தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

  • இடைவேளை விட்டபின் லைட்டுகளை போட்டுத் தொலையுங்களேன்.அதற்குள் என்ன அவசரம் ?
  • End Creditsஐ முழுதாக போடுங்கள்.எந்த ஒரு (சிறு) கலைஞனுக்கும் அங்கீகாரம் மிகவும் முக்கியம்.அவன் விரும்புவதும் அதுவே.ஒன்றிரண்டு பேராவது அதை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.
 
2 Comments

Posted by on January 19, 2011 in Cinema, Society

 

Aadukalam – நெத்தியடி.

இடைவேளை விட்ட போது மனதில் ஒரு வித பயங்கர excitement. மிரண்டு போய் வெளியே வந்தேன்.டாய்லெட்டில் சென்று கண்ணாடியில் முகத்தை பார்த்துபோது உற்சாகம் கொப்பளித்து கொண்டிருந்தது.தெரிந்தவன் தெரியாதவனையெல்லாம் செல்ஃபோனில் கூப்பிட்டு, முதல் பாதி ஏற்படுத்திய தாக்கத்தை பரபரப்போடு புலம்பிக்கொண்டிருந்தேன்.கற்றது தமிழுக்குப் பிறகு ஆடுகளம் ஒரு Brilliant Film-making.

இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.நண்பன் நச்சரிப்பு தாங்காமல் “பொல்லாதவன்” படத்திற்கு வேண்டா வெறுப்பாக தியேட்டரில் உட்கார்ந்தேன்.ஆனால் படம் நகர நகர,அந்த திரைக்கதையின் போக்கு வியக்க வைத்தது.பொல்லாதவனை வெறும் வணிகப்படமாக நாம் ஒதுக்கிவிடமுடியாது.அந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பும்,சென்னையின் நிழல் உலக மனிதர்களை காட்டிய விதமும் பாராட்டுக்குரியது.படம் நன்றாக ஓடினாலும் அது சரியாக கொண்டாடப்படவில்லை என்பதில் வருத்தமே.அப்பொழுதே தெரிந்தது வெற்றிமாறன் வழக்கமான மசாலாக்குள் அடங்கமாட்டாரென.இப்போது திட்டவட்டமாக தெரிந்து விட்டது ஆடுகளத்தில்.

படத்தின் களனான சேவற் சண்டையை நாம் பல படத்தில் பார்த்திருந்தாலும் ஆடுகளத்தை போல எந்த ஒரு படமும் இவ்வளவு அழுத்தமாக காட்டியதில்லை இனி காட்டப்போவதுமில்லை.வெறும் சேவற் சண்டையோடு நில்லாமல்அதன்பின் இருக்கும் அரசியல்,பகை உணர்வு,எந்தளவுக்கு ஒரு குறிப்பிட்ட மக்களிடம் சேவற் சண்டை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை காட்டிய விதம் பிரமிக்க வைக்கிறது.

மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது வெற்றிமாறனின் மிரள வைக்கும் காட்சியமைப்பு அல்லது Scene Execution.ஒவ்வொரு காட்சியும் தனித்து நிற்கின்றன.அதிலும் இடைவேளைக்கு முன் நடக்கும் அந்த சேவற் சண்டை காட்சிகள்,ஒவ்வொரு ரவுண்ட் முடிந்தபோது சேவலை அடுத்த ரவுண்டிற்கு தயார் செய்யும் விதம்,தனுஷிற்கும்,பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஈகோ மோதல்கள் எல்லாம் beyond appreciation.வேல்ராஜின் ஒளிப்பதிவை இங்கு கண்டிப்பாக பாராட்ட‌ வேண்டும்.சில இடங்களில் லைட்டிங்குக‌ள் அதகளப்படுகின்றன.(உ‍ம்:கிளைமேக்சில் கருப்பும் பேட்டைக்காரனும் Dull லைட்டிங்கில் சந்திக்கும் காட்சியில் ஒளிப்பதிவு கன கச்சிதம்)அடுத்த‌து அட்டகாசமான கருப்பு,பேட்டைக்காரன் Characterisation.ஜெயபாலனுக்கும் தனுஷுக்கும் Life-time-best role.Indeed,they completely stole the show.(ஜெயபாலனின் விடு,சேவல் கூண்டுகள் எல்லாம் படு அமர்க்களம்.)

பட‌த்தின் ஒரே வருத்தம் இளையராஜா இசை இல்லாதது.சில காட்சியில் பின்னணி இசைக்குப் பதிலாக Yogi-B குரலை பின்னணி இசையாக ஒலிக்க வைத்திருப்பது எரிச்சலைத் தருகிறது.படத்தின் உயிரான இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவ்வப்போது தமிழில் சில சுமாரான படங்கள்(மைனா,களவாணி) வந்தாலே விமர்சகர்கள் அவர்களின் வழக்கமான பல்லவியை ஆரம்பித்துவிடுவார்கள் “ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு முக்கிய படம்“.அந்த‌ Superlative எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆடுகளத்திற்கு கண்டிப்பாக பொருந்தும்.

 
3 Comments

Posted by on January 17, 2011 in Cinema

 

Tags: , , , , , , ,