RSS

Category Archives: கவிதை

பெங்களூரில் இன்று மழைக்காலம்.

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது – பருவ மழைதான் – இன்று பெய்தது.வருடா வருடம் ஜுனிலேயே தவறாமல் வருவது இந்த வருடம் ஜூலைவரை பெங்களூர் மக்களை காக்க வைத்து படாத பாடு படுத்திற்று.மழைக்கு வந்த வாழ்வு!!! இன்று இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை தூறிக் கொண்டேதான் இருக்கிறது.சன்னலை திறந்து வைத்து இதை தட்டச்சு செய்யும் போது அறை எங்கும் அலாதியான குளுமை!! அது என்ன மாயம் என்று புரியவில்லை,ம‌ழை நேரங்களில் பெண்கள் அநியாயத்திற்கு அழகாய்த் தெரிகிறார்கள்!

மனம் மிகுந்த பரவசத்திலிருந்தது.இந்த உற்சாகத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கும்விதமாக‌ கார்த்திக்கை கைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் அவர் கழுத்தை அறுத்தேன்.அதற்கு மேல் நீட்டித்தால் என் நம்பரை delete செய்து விடுவாரோ என எண்ணி முடித்துக்கொண்டேன்.

ஒரு நல்ல ஃபிலடர் காபியை பருகிக்கொண்டு மழையை ரசிக்கும் மனநிலையில் இருந்தேன்.ஆனால் இந்த பாழாய்ப் போன அலுவலக மெஷினில் Cappucino எழவைத் தவிர வேறில்லை என்பதால் அதை குடித்துக்கொண்டே மழையை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்தால் ஒரு நல்ல நாவலை கையில் எடுத்து சன்னல் பக்கம் அமர்ந்திருக்கலாம்.மழையை பார்த்து கொண்டு படிப்பது சுகானுபவம்!!! ம‌ழை என்றதும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ….

Charanam : 1

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய Shower இது
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

Charanam :2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்!!

 

Tags: